Thursday, December 11, 2008

காதல சொல்லு தன்னால

என்னமோ நடக்குது எனக்குள்ள
எப்படிதான் ஆணேனோ தெரியல

உள்ளுக்குள்ள புகுந்து உசிரத்தான் எடுக்கிற
உங்கிட்ட சொல்லாமத்தான் நான் முழிக்கிற

மீன்கள் வலைவீசுது உன் கண்ணால
மீளம மாட்டிக்கிறென் ஏன் உன்னால

சின்ன சின்ன ஆசைகுள்ள சிக்கிக்கிட்டேன்
சிக்க வைச்ச பொண்ணு நீ சிரிச்சதால

மாறிப்போனேன் நான் சுத்துறேன் உன் பின்னால
மனசுகுள்ள வந்தவளே காதல சொல்லு தன்னால

உயிரே!

உன் சிந்தனையில் வாழ்வது
என்றானேன்..

விழி வழி புகுந்து
உயிர் வரை ஆனாய்..

சிந்திக்கும் சுகம் நீ
சிந்தனைக்கும் சொந்தக்காரி

விட்டு விட்டேன் என்னை
கட்டுண்டேன் உன்னிடம்

விடையளிப்பாயா! கடவுளே!

விடையளிப்பாயா என்னையும் பெயர்த்த
புதியவனே! கடவுளே!
புதிராகிப் போனாய் புரியாமல் நானும்

பாவங்கள் போக்கிடவே பல மக்கள்
உண்டியலை நிரப்புகின்றார்
பாவம் ஏனோ?
உணவிலா மக்களை மறக்கின்றார்

கண்ணிலா குருடராய் நடிக்கின்றார்
கண்டும் உதவி தர மறுக்கின்றார்
மக்களில் தனி அடையாளம் காணுகிறார்
மனிதம் மறந்தே போகிறார்

உறவுக்கும் உயிர் தர பொருள் வேண்டுகிறார்
உணர்வு நிலை அறிய மறுக்கின்றார்
காசிருந்தா காதலும் தருகின்றார்
கடவுளே! கடைசியில் உன்னைத்தான் நாடுகிறார்

இப்படித்தான் நானும் வாழனுமா இன்னும்
எப்படித்தான் விடையளிப்பாயா என்னையும் பெயர்த்த
புதியவனே! கடவுளே!

அவனும் ஆளாக வேண்டும்

அவனும் ஆளாக வேண்டுமென்ற எண்ணமோ
அடி மனதில் நெடுநாளாய்..

அவன் பேரில்தான் அத்துனையும்

எங்கே இருக்கிறான்?
இப்போது பிரகலாதன் வினவினாலும்
ஆச்சரியமில்லை

கண்ணில் தெரியும் மனிதர்கள்
தொலைந்து போய்
காணாத உனக்காகதான்
பலிகள் பல பெயரில்

மதம் பிடித்து மதங்கள்
இப்போது
மனிதனை விலங்காக்கும்
முயற்சியில்..

வந்துவிடு இங்கே
ஒரு முறை எங்களோடு
வாழ்ந்துதான் பாரேன்..

மரித்து போன மானுடம்

வீதியில் வாழும்
தாய் ஒருத்தி
மேள சத்தம் கேட்டு
தெரு வழி நோக்கினாள்
பால் குடம் தூக்கி
மங்கையர் கூட்டம்
உலகம் வாழ
தெய்வத்தை வேன்டி சென்றார்

தாயின் இடுப்பில்
குழந்தை அழுதது
பாலுக்கு!

காதல் கிறுக்கல்

புண்ணகையில்
எனை ஈர்த்த மலரே
உன்
கண்ணசைவில்
காதலை காட்டிவிட
வேண்டுகிறேன் நானே
பெண்ணே!
உன் அசைவில் உளறுகின்றேன்
போதை கொண்டெ நெஞ்சம்
தேடிடுமே உன்னை
பேதை நீயும் வாட்டலாமோ
என்னை

காதல் கனி ரசம் - "காதல் மொழி"

சின்னஞ்சிறு ஆசைகள் தோணுதே
சுகம் பெருகுதே மனம் மகிழுதே
கண்ணங்கரு விழிகள் காட்டிவிட்ட
காவியமே நெஞ்சின் ஓவியமே

குளிர் காற்றுமிங்கே சுடுகிறதே
உனது முகம் நினைக்கையிலே
நட்சத்திரம் சிரிக்கின்றது
ஓ.. என் காதல்
மெல்லத்தான் பூக்கிறது

கார்கால மேகமாய் கூந்தல் தன்னை
தள்ளினாய் தேன் மழை பொழியுதே
இன்பம் பொங்குதே
என் மனதிலெ வெண்ணிலா கதை சொல்லுதே
சுகம் அள்ளுதே

வாசமெலாம் உன்னிடத்தில் தருகிறேன்
நாளும் உனை தொடந்திடத்தான்
காதல் வழி தெரிகிறது
நம் காதல் மொழி இனிக்கிறது
மனதிலே நாளும்

கண்ணீர் அஞ்சலி

மும்பை நகரின்
இருளைக் கிழித்தாய்
இரவை தொலைத்தாய்
கடமை நினைத்தாய்
காத்து நின்றாய்

வேற்றவனை
மனிதகுல வேற்றவனை
வெற்றி கொண்டாய்
என்னுயிர் வீரா
உன்னுயிர் ஈந்தாய்
மக்கள் தம் எமக்காக

தாய் நாடு காத்த
உனைப் போற்ற
எம் மக்கள் இங்குண்டு
உன் இழப்புக்கு
ஈடு செய்ய
ஏதுண்டு இங்கேதான்

சிந்துகின்றோம் கண்ணீரை
வற்றாமல்..
இதயத்தில் இருத்திக்கொண்டோம்
இனி வரும் தலைமுறை
உன் புகழ் சொல்ல

Tuesday, December 2, 2008

காதல் கனி ரசம் - "கணாக் காணும் நேரமிது"

கணாக் காணும் நேரமிது
மனதில் சுகம்பெறும் மாலையிது
எண்ணிலா வண்ணங்களில்
வெண்ணிலா ஆடுது
மனமெலாம் உனையெ நாடுது

கண்ணிலே இந்த
பெண் நிலா பட்டாதால்
எண்ணிலா கனவுகள்
பெண்ணிலா உன் மீதுதான்

நெஞ்சிலே என் நெஞ்சிலே
கவிதைகள் ஊறுது
சுவைப்பலா நீ சுவைப்பலா
உனது புகழ் பாடுது


சொல்லிலா உன் சொல்லிலா
செவி வாடுது
பூவிலா நல்ல தேன்பலா
நீ கூடும் நேரமிது

வாழ்விலா நீயிலா வாழ்விலா
வசந்தம்
முகமிலா உன் முகமிலா
உயிர் உருகுது

எந்தன் உயிர் உருகுது
அழகே வா
கணாக் காணும் நேரமிது
மனதில் சுகம்பெறும் மாலையிது

காதல் வலி - "என் ஜீவனே"

சின்னக்கிளி என் செல்லக்கிளி
என்னை விட்டு போகுது
மனம் ஏங்கி வாடுது
சுகம் நீங்கி போகுது

உன் பார்வையில் என் காவியம்
என் கண்களில் உன் ஓவியம்
என்றும் மறையாதது
விட்டு பிரியாதது

காதலில் உன்னை நினைக்கையில்
சுகம் வந்தது
நீ நீங்கயில் நீரோடையில்
கண்கள் மிதக்கின்றது

குயிலோசையில் மன ஆசையில்
பாடித் திரிந்தது
விட்டு போகையில் காதலில்
இதயம் அழுகின்றது

என் ஜீவனே என் கீதமே
என் வாசமே நீங்காதே
என் தீபமே என் வேதமே
நீங்கினால் உயிர் வாழதே

பூங்கொடி அன்புத்தாயடி
பூவிழி நீ தேன்மொழி
உன் மடி என் படி
உலகம் நீதானே

காதலின் சாபமோ
ஏக்கமே என்று தீறுமோ
தூக்கமே போனது
உணராயோ பொன்மானே

Monday, December 1, 2008

காதல் தேவதையே!

வெண்பனித் தாரகை செம்மலர் மேனகை
பூவிதழ் விரித்தாள் சுவைநீர் தெறித்தாள்
மைவிழி பூங்குழலி கைவளை இசைத்தாள்
தெள்தமிழ் இறைத்தாள் மனம் பிடித்தாள்

முத்து மணிச் சரம் பற்கொண்டாள்
பித்து பிடித் தேறும் சொற்கொண்டாள்
நடை யழகினில் மயில் தனைக்கொண்டாள்
நித்தம் தனைத் தேடும் எழிற் கொண்டாள்

பற்றிட கைப்பற்றிட மென்மலர் மென்மை
கற்றிட்ட வித்தைகள் களவுபோனது உண்மை
வென்றிட யாருள சொல்லிங்கு இல்லை
சென்றிட மனமேங்கும் ஏது எல்லை

நீ, நான் மற்றும் காதல்

பெண்ணே!
பழகிய நாட்கள்
தனிமை பேச்சு
எனக்கென்ற நீ
இவைகளை எளிதாய்
மறந்து போனாய்
உன் திருமணத்தில்...

என்னை தனிமைப்படுத்திய நீ
சொல்ல மறந்தாய்
உன் நினைவுகளுக்கு..
அவைகள்
என்னைப் பின்னியே
எப்போதும்...