Monday, December 1, 2008

காதல் தேவதையே!

வெண்பனித் தாரகை செம்மலர் மேனகை
பூவிதழ் விரித்தாள் சுவைநீர் தெறித்தாள்
மைவிழி பூங்குழலி கைவளை இசைத்தாள்
தெள்தமிழ் இறைத்தாள் மனம் பிடித்தாள்

முத்து மணிச் சரம் பற்கொண்டாள்
பித்து பிடித் தேறும் சொற்கொண்டாள்
நடை யழகினில் மயில் தனைக்கொண்டாள்
நித்தம் தனைத் தேடும் எழிற் கொண்டாள்

பற்றிட கைப்பற்றிட மென்மலர் மென்மை
கற்றிட்ட வித்தைகள் களவுபோனது உண்மை
வென்றிட யாருள சொல்லிங்கு இல்லை
சென்றிட மனமேங்கும் ஏது எல்லை

1 comment:

Abi..My Heart Is Singing... said...

Super lines.. was able to visualise ur words...