Monday, November 15, 2010

சொல்லாமல் ஒரு ஆசை!


பூஞ்சோலை பூவின்
வாசம் முகர்ந்து
பூவின் மடி தேடி
அலைகின்ற வண்டெனவே
அருகே அமர்ந்திருக்கும்
உன்னிடம் கேளாமல்
தவித்திருக்கும் மனம்

தீண்டுதலோ தொடுதலோ
அல்லாமல்.. இடைவெளி
இன்னும் வேகம் கூட்டும்
அன்பின் வேறு நிலை!
புதிதாய் ஊற்றெடுக்கும்..

சில்லென்று பரவும் காற்றில்
உடல் விடும் வெப்பமோ
மூச்சுக் காற்றில் வெளியேறும்..
வெளியேறா ஆசைகள்
அணுக்களை பிளக்கும்

கண்டு பிடித்துக்கொள்!
கண்டு பிடித்துக்கொள்!
என்றபடி..
என் கண்களில் விரவிகிடக்கிறது
எல்லை மீறுவது உன் விருப்பமென்ற
செய்தியே!


பின்..
பேச்சுக்கள்... தொடர்ந்தும்
முடிவில்..
விடைபெற்று செல்கிறாய்...
கடைசிப்பார்வையில் நீயும்
சொல்லிச்சென்றாய்...
எல்லை மீறுதல் என் விருப்பமென்று...

ஓ....
மடியில் தலை சாய்க்க
தோற்ற எனக்கு
பூவின் இதழில் கிறங்கும் வண்டு
கேலி செய்கிறது.....
சொல்லாமல் ஒரு ஆசை
காலவதியாகிறது...

மழை

ஒவ்வொரு முறை
வானம் பார்க்கும் பொழுதெல்லாம்
மேகம் பல உருவெடுக்கும்
விழிக்கு விருந்து வைத்து
கற்பனைகளை தூண்டிவிடும்
உள்ளத்தின் உரசல்கள்
மனதின் இறுக்கங்கள்
கரைத்து விடும்...

நீல வான பரப்பில்
வெண்மையாய் ஒளிர்ந்திடும்
ஒப்பனையில்லா அழகில்
ஒரு இணையில்லா
மகிழ்வை அளித்திடும்

பல நாட்கள் களித்திருந்தேன்
மேகத்தின் எழிலில் திளைத்திருந்தேன்

ஒர் நாள்..
நிலவென வந்தாளே
நிலப் பெண் ஒருத்தி
விழி வீச்சில் விழச் செய்தாள்
இமை மூடாமல் ரசிக்க செய்தாள்
மேகத்தை நிலவு மறைத்த
விந்தை நிகழ்ந்திடும்
அப்பொழுதில்
இதயங்கள் உரசிக்கொள்ள
காதல் தீ பற்றியதே

தினம் ரசிக்கும் மேகப்பெண்
கோவம் கொண்டாளோ!
பொறாமயிற் கருத்தாளோ!
கள்ளி யாரிவளென
இடியென சத்தமிட்டாள்
மின்னலென சைகையிட்டாள்

எவ்வித குறிப்பும் உணராமல்
நிலப்பெண் காதலில்
லயித்திருக்க

துன்பம் தாங்கா.... மேகப்பெண்
கண்ணீரால் வீதி நிரப்ப
வற்றாது அழுகின்றாள்

ஹைய்யா! மழை.. மழையென
மழலைகள் கும்மாலமிட்டனர்

வான் நேக்க
மேகம்.. இருள் பூசியிருந்தது..