Tuesday, February 9, 2010

மக்கள் ஆட்சி

சாலையின் பள்ளங்களில்
மக்களின்..
தடைபடும் பயணங்கள்

பல நாட்களாய்..
காட்சிப் பொருளாய்
காப்பற்றிய அரசு

ஓர் நாளில்..திடிரென!
பூக்கும் காளானாய்!
சாலையின் பள்ளங்கள்
சமப்பட்டுப்போக

விரிந்த விழிகளில்
ஆச்சரியம்!

"இன்று வருகிறார்"
வாசகம் தாங்கியபடி..

"இந்தியாவின் இளவரசர்"
சுவரொட்டியில் சிரிக்கிறார்


"மக்கள் ஆட்சி" யில்
வருகைக்கு காத்திருக்கு
இன்னும்.. பல சாலைகள்
இங்கும் வந்து போகட்டுமென...