Tuesday, December 2, 2008

காதல் கனி ரசம் - "கணாக் காணும் நேரமிது"

கணாக் காணும் நேரமிது
மனதில் சுகம்பெறும் மாலையிது
எண்ணிலா வண்ணங்களில்
வெண்ணிலா ஆடுது
மனமெலாம் உனையெ நாடுது

கண்ணிலே இந்த
பெண் நிலா பட்டாதால்
எண்ணிலா கனவுகள்
பெண்ணிலா உன் மீதுதான்

நெஞ்சிலே என் நெஞ்சிலே
கவிதைகள் ஊறுது
சுவைப்பலா நீ சுவைப்பலா
உனது புகழ் பாடுது


சொல்லிலா உன் சொல்லிலா
செவி வாடுது
பூவிலா நல்ல தேன்பலா
நீ கூடும் நேரமிது

வாழ்விலா நீயிலா வாழ்விலா
வசந்தம்
முகமிலா உன் முகமிலா
உயிர் உருகுது

எந்தன் உயிர் உருகுது
அழகே வா
கணாக் காணும் நேரமிது
மனதில் சுகம்பெறும் மாலையிது

No comments: