Thursday, December 11, 2008

கண்ணீர் அஞ்சலி

மும்பை நகரின்
இருளைக் கிழித்தாய்
இரவை தொலைத்தாய்
கடமை நினைத்தாய்
காத்து நின்றாய்

வேற்றவனை
மனிதகுல வேற்றவனை
வெற்றி கொண்டாய்
என்னுயிர் வீரா
உன்னுயிர் ஈந்தாய்
மக்கள் தம் எமக்காக

தாய் நாடு காத்த
உனைப் போற்ற
எம் மக்கள் இங்குண்டு
உன் இழப்புக்கு
ஈடு செய்ய
ஏதுண்டு இங்கேதான்

சிந்துகின்றோம் கண்ணீரை
வற்றாமல்..
இதயத்தில் இருத்திக்கொண்டோம்
இனி வரும் தலைமுறை
உன் புகழ் சொல்ல

No comments: