Thursday, February 26, 2009

குழந்தை

மானே தேனே நீயேதானே
இனிக்கும் இன்பம் உன்பேச்சில்தானே

வாழ்க்கை வசந்தம் தானே
வாழும் சூழும் பாசம்தானே

என்னுயிர்க்கு நீ உருவம்தானே
உனைச்சுற்றும் பக்தன் என்பேனே

உன்னில் என்னை கண்டேனே
உணர்ந்திட மகிழ்ந்திட சுகமென்பேனே

அம்மாவென்று அழைத்தாய் சுவைத்தேனே
சும்மாவே சுரக்கிறாய் இதழில்தானே

பெருமைக்கு ஆளானேன் நானே
பெண்மைக்கு பொருளானேன் உண்மைதானே

இயலாமை

வெற்றுக்கூச்சல் பகல் வேடம்
வேடிக்கை மனிதர்கள்
அன்றாட வாழ்க்கையில்
அலுத்துப்போன காட்சிகள்

அடுத்த வீட்டில் அலறல் என்றாலும்
தமக்கில்லை என
செவிடாகும் காதுகள்
குருடாகும் கண்கள்
வாய் பேசும்.. மனிதாபிமானம்

இயலாமை இயல்பாய்
இணைந்து இருக்கையில்
உயிர்த்துண்பம் உணரமுடியுமோ?
நடப்பதென்னவோ இலங்கையில்தனே!!

சட்டங்களின் பிடியில்
உணர்ச்சிகள் எங்கே?
அரசியல் முறைகளில்
அறிவுதான் எங்கே?

கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கள்
போராட்டம் கடையடைப்பு
தீக்குளிப்பு... பழகிப்போனோம்
என்றேனும் ஒன்றானோமா?

கலங்கிய கண்களோடு
கொடுதுண்பம் மக்கள் படும்நிலை
கவிதையாய் உருமாற்ற முயன்றாலும்
என் (நம்) இயலாமை விரக்தியாய்
வியாபிக்கிறது கண்ணீராய்...

ஆறுக்குள்ள ஐந்து!!!


பகுத்தறிந்த செயல்களா? இங்கே
எழுத்தறிந்த மேதாவிகள் செய்வது
நீதிக்குதான் பொருந்துதோ?

கலவரக்கூடம் நீதிமன்றம் இங்கே
கருப்பு சட்டை நீதிமான்கள்
காக்கிசட்டை காவலர்கள்
கல்லுக்கும் கம்புக்கும் வைக்கிறர் சோதனை
பார்பதற்கு இது என்ன வேதனை?

தனி மனிதன் சட்டத்துகுள்ள தவிக்க
தலைக்கண கூட்டம் சட்டத்தை மிதிக்க
கண்முன்னே காட்சிகளா பார்க்க
எதுதானுண்டு இந்த ஐந்துகளை ஆறாக்க?

Saturday, February 14, 2009

அன்பே என் ஆருயிரே!!!


என்னானு எனக்கு தெரியல
எதாச்சு அதுவும் புரியல
தூக்கம்தான் போச்சு சிலநாளா
எம்மேல காதலுன்னு நீ சொன்னதால

சோதனைதான் பல உருவில் காதலுக்கு
சொல்லிதான் தெரியனுமா அது உனக்கு
சந்திக்கலாமுன்னு சொல்லிப்புட்ட காதலர் தினத்துல
வந்துருச்சு தவிப்புதான் இதயத்துல

அந்த பக்கம் சிவசேனா
இந்த பக்கம் ராமசேனா
கத்துறாங்க விடுவேனா
சுத்துறாங்க தலைப்பேனா

கண்ணை பறிச்சு வில்லை முறிச்சு
காதல் பண்ணாரு ராமரு
பொண்ணை தூக்கி காதல தாங்கி
கல்யாணம் பண்ணாரு சிவனாறு

கடவுளெல்லாம் காதலிச்சா கும்பிடுறாங்க
கும்பிடுறவங்க காதலிச்சா குமுறுறாங்க
கோபிக்காத காதல வாழ்த்தா அனுப்புறெங்க
உண்மையான காதலுக்கு தனி தினம் தேவையில்லங்க

இனிமேலும் தாங்காது மனம்


ஏன் எனெக்கென்ன ஆச்சு
உன் எதிரில் வாங்குது மூச்சு
பேசுற கண்ணுல பேச்சு
மனசுல பொங்குறேன் காதலாச்சு

என்னென்னவோ நினைக்கிறென் ஏங்கி
இதயத்திலதான் உன்னை தாங்கி
வாழுறென் நானும் மயங்கி
சேர்ந்திடு நீதான் மனமிரங்கி

கண்ண மூடுனா நீதான் தெரியிற
கனவா வந்து என்னை வாட்டுற
ஏன் இப்படி பண்னுற
கொல்லாம நீயும் கொல்லுற

இனிமேலும் தாங்காது மனம்
வருது இப்போ காதலர் தினம்
சொல்லிவிடு உன் காதல் எண்ணம்
இதற்கில்லை ஈடு இது திண்ணம்

Saturday, February 7, 2009

காதல் வந்தால்....

அலை பேசியில்
அழைத்து
அன்பே!
நீ பேசினால்
சப்தமில்லா வார்த்தைகளும்
அர்த்தமாகும்
சப்தங்களும் வார்தைகளாகும்

அருகினில் வந்தால்
கண்கள் பேசும்
வாய் ஊமையாகும்

நினைவில் வந்தால்
நீ கவிதையாகும்
விந்தை எனக்கே புதிருமாகும்

உறக்கத்தில் வந்தால்
கனவாகும் உன்னருகே
என் செயல்கள் தைரியமாகும்

பிரிவு வந்தால்
உடைந்து போகும்
உயிர் நீ என உண்மையாகும்