Thursday, December 11, 2008

காதல சொல்லு தன்னால

என்னமோ நடக்குது எனக்குள்ள
எப்படிதான் ஆணேனோ தெரியல

உள்ளுக்குள்ள புகுந்து உசிரத்தான் எடுக்கிற
உங்கிட்ட சொல்லாமத்தான் நான் முழிக்கிற

மீன்கள் வலைவீசுது உன் கண்ணால
மீளம மாட்டிக்கிறென் ஏன் உன்னால

சின்ன சின்ன ஆசைகுள்ள சிக்கிக்கிட்டேன்
சிக்க வைச்ச பொண்ணு நீ சிரிச்சதால

மாறிப்போனேன் நான் சுத்துறேன் உன் பின்னால
மனசுகுள்ள வந்தவளே காதல சொல்லு தன்னால

No comments: