Friday, November 28, 2008

காதல் வலி - "என் காதல்"

என் காதல் உன்னை வந்து
சேரவில்லையா
ஏங்கி மனதுள் நானும்
புழுங்கவில்லையா
என்னோடு நானே உன்னை
தேடுகின்றேன்
கண்ணீரில் நானும்
வாடுகின்றேன்

காதல் என்னும் தேரிலே
நானும் பறந்து வந்தேன்
மனம் வாடி நானே
வந்த வழியில் நின்றேன்
உன்னோடுதான் எந்தன்
வாழ்வு மானே
தவிக்கிறேன் எனக்குள்
நானே

வாசம் போன பின்னே
பூவிருந்தும் என்ன
தேவி நீயும் போன பின்னே
நானும் இருந்து என்ன
கண்கள் இங்கு தூங்குமோ
இதயம் உன்னை மறக்குமோ
கண்ணீரில் நானே வாடுகின்றேன்

காதல் கனி ரசம்- "பூ மகள்"

புதிய பாடல் மனதோடு தோன்றும் வேளை
பூவை முகம் காண வேண்டும் - அதில்
நாளும் சுகம் காண வேண்டும்

என்னில் விளைந்த கற்பனை யாவும்
உனக்கே உரிமையாக வேண்டும் - என்
உயிரெ நீயாக வேண்டும்

இதய வானில் ஒளிருகின்ற நிலவே
பரந்த உலகில் என் மனதில் உன் முகமே - அது
தேடுவதும் நாடுவதும் உனைத்தான் தினமே

வா நில் தா ஒரு சொல் மனம் மகிழுமே
போ என்றலும் இரு என்கிறது மனமே - நீ
விழிகளில் விழும் சுகமோ?

Tuesday, November 25, 2008

காதல் வலி - "நினைவுகளே"

நினைவுகளே நினைவுகளே நீங்கிவிடுங்கள்
நீலம் பூத்த மைவிழியை மறந்துவிடுங்கள்
காதலில் அலைந்தேன் கனவினில் திரிந்தேன்
அவள் உள்ளம் புரிந்ததம்மா
என் வாழ்க்கை கரையுதம்மா

ஏற்றி வைப்பாள் தீபமென்று
ஏந்திழைக்கு காத்திருந்தேன்
காத்திருந்த காலமெல்லாம் வீணாக போகுதம்மா
கண்மனியை நாயகியாய் கனவினில் கண்டேன்
கண்டது கனவென நினைவில் சொன்னாளே

கற்றுக்கொண்டேன் பாடங்கள் காதலினால்
பெற்றுக்கொண்டேன் துன்பங்கள் அவள் நினைவால்
பூந்தாரகை எனை மறந்தாலும் பிரியேன் அவள் கனவுகளோடு
ஒருதலையாய் காதல் கொண்டேன்
அவள் ஒருவளுக்கே என் வாழ்வை தந்தேன்

Monday, November 24, 2008

உன்னாலே! உன்னாலே!

ஒவ்வொரு முறை முயன்றும்
தோற்றுப் போகிறேன்
உன் பார்வையில்........


ஜன்னல் கம்பிகளில்
கண்பட்டுத்தான்
இதயம் சிறைபடுகிறது....


அணை கடந்த வெள்ளமாய்
நான்!
தொலைவில் வருகிறாள்
காதலி....


நீ வந்தாய்
நிலவு ஒளிர்ந்தது
நானும்தான்.....


கண்கள் செலுத்திய
காதல் ஏவுகனை
உன் பார்வை...

அடை மழையிலும்
நிலவு!
எதிர் வீட்டு ஜன்னல்

காதல் கனி ரசம் - "ஆனந்தம்"

ஆனந்த தேரிலேறி
ஆசையோடு பாடுகிறேன் - நான்
ஆனந்த தேரிலேறி
ஆசையோடு பாடுகிறேன்
காதல் தேவதையை கண்டுவிட்ட
களிப்பினிலே காதல் கீதம்
பாடுகிறேன்

நேற்று வரை நான் வேறே
இன்று முதல் நான் வேறொ
காட்சி தந்த காதலியை
கனவிலும் நினைவிலும்
ரசிக்கிறேன்

துடிப்புடனே உதட்டிலும்
வார்த்தைகள் ஒத்திகை பார்க்குமெ
அவள் அருகினிலே தடுமாறுமே

கண்ணோடு நான் பேசிய
கதைகள் மாறுமோ?
பேச்சோடு தேன் தந்த
சுவைதான் தீருமோ?

எனை ஆளும் ரோஜாவே
என்னிதயம் உன் வழியில்
நம் காதலில் உருகுமே
இன்பம் பெருகுமே

காதல் வந்தால்..

கண்கள் மகிழும்
உனை கண்டால்
என் புண்ணகையும்
உன்னால் அர்த்தமாகிறது
புலன்கள் யாவுமே சுகமாய்
பூவே உன்னாலேதான்

உன் சுவாசக் காற்றில்
சுழலும் காற்றாடியானேன்
என் இதயத்தில் புகுந்து
புது விசையுமானாய்
நீ காந்தமானய்
எனை மட்டும் ஈர்த்துக் கொன்டாய்

நீ இல்லாமலும் மகிழ்கிறேன்
உன் நினைவுகளால்
கனவுகளை நீட்டிக்க முயல்கிறேன்
உன்னிடம் நெருக்கமாவதால்
இப்படியே வாழ்ந்து விட
என் காதல் ஏங்குது

Friday, November 21, 2008

காதல் கனி ரசம் - "சுகமான இராகங்கள்"

சுகமான இராகங்கள் நாளும்
என் மனதில் இசைக்கின்றது
சுவைத் தேன் பெண்ணல்லவோ
கீதம் புனைகின்றது

முகம் தேடி எங்கெங்கோ
அலைகின்றேன் உன்
மனம் நாடி எனை
சேர்த்திட முயல்கின்றேன்

மணமாலை நிதம் சூட்டி
உனை பார்க்கின்றேன் அந்த
மண நாளை உன்னிடம்
எதிர் பார்க்கிறேன்

அழகான மான் போல
மறைந்தோடினாய்
இனிதான நினைவோடு
உயிர் வாழ்கிறேன்

பால் போன்ற சிரிப்போடு
எனை மாற்றினாய்
பழகாத உன் பெண்மைக்கு
மெருகூட்டினாய்

Tuesday, November 18, 2008

காதல் கனி ரசம்- "பெண்ணோவியம்"

பெண்ணோவியம் உயிர் கொண்டதோ
இங்கு நாளும் புது காவியம்
புனைகின்றதோ

இளம் நெஞ்சில் இனிதான
நினைவலைகள் புரல்கின்றதோ
சுகம் விளைகின்றதோ

சுவை தேடும் என்னுயிர் உனைத்தேடுது
மறைந்தோடும் உன்னழகை
மனம் பாடுது

மலர் போன்ற மங்கை உன் விழி பேசுது
மௌனம் உனது புகழ்
சேர்க்குது

நீ வரும் பாதை என்னாசை எதிர் பார்க்குது
பெரும் போதை உன் இதழோரம்
இருக்கின்றது

பெண்ணோவியம் உயிர் கொண்டதோ
இங்கு நாளும் புது காவியம்
புனைகின்றதோ

Friday, November 14, 2008

காதல் "திவால்"

எங்கு சென்றாய் இதயம் விட்டு
உன் காலடி சுவடுகள்
இன்னும் இங்கே

தென்றல் உன் சுவாசக் காற்றாய்
இலைகளின் அசைவுகள் உன் கொலுசாய்
பறவயின் ஓசை உன் சிரிப்பாய்
இன்னும் இங்கே
எங்கு சென்றாய் இதயம் விட்டு

மணித்துளிகள் நொடிகளானது
இப்போது நொடிகளும் யுகங்களாய்
உன் மௌனம் பேசியது
இன்று கொல்கிறது
எங்கு சென்றாய் இதயம் விட்டு

நீதான் நானென்றாய்
யாரோவாகினென் இன்றோ
கேட்டுப்பார் உனக்குள்
இருப்பேன் இன்னும்
முதலில் புகுந்தவன் முடிவில்லாதவன்
இன்னும் இங்கே
எங்கு சென்றாய் இதயம் விட்டு

அன்பெ சிவமென்றென் நீயுமென்றேன்
பொருளாதரம் என்றாய்
நிதி சிக்கலில் என் காதல்
தீரும்வரை நான்
இன்னும் இங்கே
எங்கு சென்றாய் இதயம் விட்டு

Wednesday, November 12, 2008

என்னை மறந்துவிடாதே

நான் கவலையய் இருக்கும்போது
என்னுடன் அமர்ந்து என்னை தேற்று
நான் சுகவீனம் படும்போது
எனக்காக பிரார்த்தனை செய்
நான் மகிழ்ச்சி கொள்ளும்போது
நீயும் மகிழ்வடை
நான் இறந்து போனால்
எனக்கக அழு
ஆனால்! கண்மனியே!
நான் வாழும்பொழுது
என்னை மறந்துவிடாதே

Thursday, November 6, 2008

காதல் ஒரு நீர் குமிழி

காதல் ஒரு நீர் குமிழி
அழகாய் ஈர்ப்பாய்

அழகும் ஈர்ப்பும் நிலைப்பதில்லை
நீர் குமிழி போல

பல வண்ணம் காட்டும்
காற்றிலும்! கனவிலும்

பரிதவிக்கும் மனம்
குமிழி கலைந்துவிட்டால்

வேறொன்றும் தோன்றலாம்
அழகாய் ஈர்ப்பாய்

உனைப் போல
உயிரோடு ஓட்டுமோ?

காதல் ஒரு நீர் குமிழி
அழகாய் ஈர்ப்பாய்

உன்னைப் போல!

காதலே சுகம்

இளைய மகள் வருகிறாள்
இனிய உறவு தருகிறள்
மனம் நாடும் உன்னைத்தான்
எந்நாளும்

இது ஒரு புது நினைவு
இது ஒரு புது உறவு

எந்நாளும் உனைத்தேடும்
என்னிதயம்
நெஞ்சில் நிறைந்தாயெ
நீ ஒரு புது உதயம்

என் விழிகளில் என்றும்
உன்தன் உருவம்
மறந்தேனே
எந்தன் பருவம்

இது ஒரு புது நினைவு
இது ஒரு புது உறவு

காலங்கள் மாறிடினும்
காதலிங்கு குறைவதில்லை
கண்மனியெ எந்தனுள்ளம்
உனையும் மறந்தததில்லை

இது ஒரு புது நினைவு
இது ஒரு புது உறவு

என்னிடம் வந்தாயே
உறவுகள் நீங்கி
அன்பினை தந்தாயே
அளவுகள் இன்றி

உயிரோடு கலந்த சொந்தம்
அழியாமல் என்றும் நிலைக்கும்

இது ஒரு புது நினைவு
இது ஒரு புது உறவு