Sunday, August 30, 2009

தெய்வமிருப்பது எங்கே?

உடல் வருத்தி..
உள்ளம் உருகி...
தெய்வமிருப்பது எங்கே?
தேடி.. தேடி...
எங்கெங்கே..!!!
அலைந்து..

வீட்டில் நுழைகையில்
வாசலில் இடித்து
அம்மா..... என்றேன்..
"என்னப்பா ஆச்சு!"
என்றபடி..
வலி தீர்க்க.. வந்தபோது
தெய்வம் கண்டேன்...
எளிதாக...

Wednesday, August 26, 2009

கவிதை நட்பு

எப்போதும் போல இன்றும்
அதிகாலை ரம்மியமாயிருந்தது..

அலுவலகம் கிளம்பும் பரபரப்பு...
நேரத்தில் சென்றடைய
வேகப்பயணம்..
மனதில் ஓடிய முடிக்கபடவேண்டிய
வேலைகள்...

இத்தனையும் என்னில்
பரவியிருக்க..
அலுவலகம் சேர்ந்ததில்
மனம் இளைப்பாறியிருந்தது

வழக்கமான
ஒர்குட் வலைப்பக்கம் கவிதைகள்
பார்வையிடுதலில்
தோழியின்
பிறந்தநாள் செய்தி
இனிமைகூட்டியது..

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் "

.. என்ற என் வாழ்த்துக்கு பின்
மனம் இன்னும் மகிழ்வானது

ஆச்சர்யம் என்னுள் பரவ..

விடையாயிருந்தது..
முகம் காணா நட்பிற்கு
கவிதை நட்பாயிருந்தது..

Monday, August 24, 2009

முரண்

செல்லம்! சாப்புடுறா கண்ணா!
நெய்யூற்றி! பிசைந்த சாதத்தோடு
குழந்தையுடன் போராடி சலித்து..

"அம்மா" "தாயே" எனும் அழைப்பில்
வாசல் திரும்பியபோது!

பிச்சை கேட்டு நின்றவளின்
தோளில் இருந்த குழந்தை
சொன்னது "அம்மா பசிக்குது"

Monday, August 3, 2009

நட்பு

இரத்த சொந்தமில்லை
எதிர்பார்க்கும் உறவுமில்லை
எதற்கும் தயக்கமில்லை
மனம் மறந்ததுமில்லை
பகிர்தல் விட்டதுமில்லை

இப்படி இல்லை இல்லை
உனக்கீடு எதுவுமில்லை
நட்பே! நட்பே! நட்பே!

நீ மட்டும் இல்லையென்றால்
உலகம் சுருங்கிப் போயிருக்கும்
வாழ்க்கையும் குறுகிப் போயிருக்கும்

நட்பே உனது வட்டம் பெருக்கிவிடு
மகிழ்வின் எல்லை விரித்துவிடு...