Thursday, March 11, 2010

எல்லாமாத்தான் நீயிருக்க

நீயுமில்ல நானுமில்ல
பொண்ணுதா இல்லாட்டா
உலகத்தில யாருமே இல்ல

உசுரக் குடுக்கிற
அம்மாவா நீயிருப்ப

பாசத்த பங்கு போட
பாசமா சண்டபோட
அக்காவா தங்கச்சியா
நீ பொறப்ப

அறிவுரைப்ப நீ ஆறுதலா
தோழியா துணையிருப்ப

அம்மாவுக்கு மறுவுருவா
பொஞ்சாதியா கைப்பிடிப்ப

உசுருக்கு உருவமா
மவளாத்தான் வரமாவ

கற்பனயில்ல இது கதையுமில்ல
எல்லாமாத்தான் நீயிருக்க
பொய்யுமில்லை புரட்டுமில்ல
ஒரு சக்தியாத்தான் நீயிருக்க

என்ன சொல்ல ஏது சொல்ல
பெரும சொல்ல ஒருநாளு போதவில்ல
வாழ்த்த சொல்ல புதுசா
வார்த்த ஒன்னும் தோணவில்ல

நீயுமில்ல நானுமில்ல
பொண்ணுதா இல்லாட்டா
உலகத்தில யாருமே இல்ல....