Thursday, December 11, 2008

விடையளிப்பாயா! கடவுளே!

விடையளிப்பாயா என்னையும் பெயர்த்த
புதியவனே! கடவுளே!
புதிராகிப் போனாய் புரியாமல் நானும்

பாவங்கள் போக்கிடவே பல மக்கள்
உண்டியலை நிரப்புகின்றார்
பாவம் ஏனோ?
உணவிலா மக்களை மறக்கின்றார்

கண்ணிலா குருடராய் நடிக்கின்றார்
கண்டும் உதவி தர மறுக்கின்றார்
மக்களில் தனி அடையாளம் காணுகிறார்
மனிதம் மறந்தே போகிறார்

உறவுக்கும் உயிர் தர பொருள் வேண்டுகிறார்
உணர்வு நிலை அறிய மறுக்கின்றார்
காசிருந்தா காதலும் தருகின்றார்
கடவுளே! கடைசியில் உன்னைத்தான் நாடுகிறார்

இப்படித்தான் நானும் வாழனுமா இன்னும்
எப்படித்தான் விடையளிப்பாயா என்னையும் பெயர்த்த
புதியவனே! கடவுளே!

No comments: