Saturday, September 12, 2009

அடடா.. இதுதான் காதலா...

மாலைப்பொழுது இதமான காற்று
சில்லென்று வீச..
"இன்றென்ன பவுர்ணமியா"
வியந்து பார்க்கையில்
"நீ" வந்தாய் மாடியில்

வேறுதிசை மறந்த கண்கள்
உன்னையே! பார்க்க..
ஓரக்கண்ணில்.. என்னை வைத்து
கவனியாது போல்!
காதல் செய்கிறாய்..

"அன்பே! திரும்பிப்பார்"
காற்றில் தூது அனுப்புகிறேன்
வார்த்தைகளை..
இதயம் சென்றதுவோ! வார்த்தைகள்
"சட்டென திரும்பினாய்"

உன் பார்வை அம்புகள் குத்த
என் கண்களுக்குத்தான்!
எத்தனை ஆனந்தம்!!

மெல்லியதாய் உன் சிரிப்பு
அடடா... அடடா....
இன்னுமொரு பிறவி வேண்டும்..

ரசித்து பின்..
முத்தமொன்று கேட்கிறேன்..
"சினுங்கலாய்.. முடியாது" என்கிறாய்
கெஞ்சுவதிலும் சுகம்தான்!

எப்படியோ...

முத்தங்களை..
உள்ளங்கையில் இட்டு
உன் மூச்சும் சேர்த்து
என்னிடம் ஊதிவிடுகிறாய்!

முத்தங்களை வாங்கிகொள்கிறேன்
உன் மூச்சை என் மூச்சில் சேர்த்து கொள்கிறேன்

சேமித்து வைக்கிறேன் முத்தங்களை...
இப்படியே..
பின் நாளில் உனக்காக..