Thursday, December 11, 2008

அவனும் ஆளாக வேண்டும்

அவனும் ஆளாக வேண்டுமென்ற எண்ணமோ
அடி மனதில் நெடுநாளாய்..

அவன் பேரில்தான் அத்துனையும்

எங்கே இருக்கிறான்?
இப்போது பிரகலாதன் வினவினாலும்
ஆச்சரியமில்லை

கண்ணில் தெரியும் மனிதர்கள்
தொலைந்து போய்
காணாத உனக்காகதான்
பலிகள் பல பெயரில்

மதம் பிடித்து மதங்கள்
இப்போது
மனிதனை விலங்காக்கும்
முயற்சியில்..

வந்துவிடு இங்கே
ஒரு முறை எங்களோடு
வாழ்ந்துதான் பாரேன்..

No comments: