Tuesday, December 2, 2008

காதல் வலி - "என் ஜீவனே"

சின்னக்கிளி என் செல்லக்கிளி
என்னை விட்டு போகுது
மனம் ஏங்கி வாடுது
சுகம் நீங்கி போகுது

உன் பார்வையில் என் காவியம்
என் கண்களில் உன் ஓவியம்
என்றும் மறையாதது
விட்டு பிரியாதது

காதலில் உன்னை நினைக்கையில்
சுகம் வந்தது
நீ நீங்கயில் நீரோடையில்
கண்கள் மிதக்கின்றது

குயிலோசையில் மன ஆசையில்
பாடித் திரிந்தது
விட்டு போகையில் காதலில்
இதயம் அழுகின்றது

என் ஜீவனே என் கீதமே
என் வாசமே நீங்காதே
என் தீபமே என் வேதமே
நீங்கினால் உயிர் வாழதே

பூங்கொடி அன்புத்தாயடி
பூவிழி நீ தேன்மொழி
உன் மடி என் படி
உலகம் நீதானே

காதலின் சாபமோ
ஏக்கமே என்று தீறுமோ
தூக்கமே போனது
உணராயோ பொன்மானே

No comments: