Friday, November 28, 2008

காதல் கனி ரசம்- "பூ மகள்"

புதிய பாடல் மனதோடு தோன்றும் வேளை
பூவை முகம் காண வேண்டும் - அதில்
நாளும் சுகம் காண வேண்டும்

என்னில் விளைந்த கற்பனை யாவும்
உனக்கே உரிமையாக வேண்டும் - என்
உயிரெ நீயாக வேண்டும்

இதய வானில் ஒளிருகின்ற நிலவே
பரந்த உலகில் என் மனதில் உன் முகமே - அது
தேடுவதும் நாடுவதும் உனைத்தான் தினமே

வா நில் தா ஒரு சொல் மனம் மகிழுமே
போ என்றலும் இரு என்கிறது மனமே - நீ
விழிகளில் விழும் சுகமோ?

No comments: