Tuesday, November 18, 2008

காதல் கனி ரசம்- "பெண்ணோவியம்"

பெண்ணோவியம் உயிர் கொண்டதோ
இங்கு நாளும் புது காவியம்
புனைகின்றதோ

இளம் நெஞ்சில் இனிதான
நினைவலைகள் புரல்கின்றதோ
சுகம் விளைகின்றதோ

சுவை தேடும் என்னுயிர் உனைத்தேடுது
மறைந்தோடும் உன்னழகை
மனம் பாடுது

மலர் போன்ற மங்கை உன் விழி பேசுது
மௌனம் உனது புகழ்
சேர்க்குது

நீ வரும் பாதை என்னாசை எதிர் பார்க்குது
பெரும் போதை உன் இதழோரம்
இருக்கின்றது

பெண்ணோவியம் உயிர் கொண்டதோ
இங்கு நாளும் புது காவியம்
புனைகின்றதோ

No comments: