Monday, November 24, 2008

காதல் கனி ரசம் - "ஆனந்தம்"

ஆனந்த தேரிலேறி
ஆசையோடு பாடுகிறேன் - நான்
ஆனந்த தேரிலேறி
ஆசையோடு பாடுகிறேன்
காதல் தேவதையை கண்டுவிட்ட
களிப்பினிலே காதல் கீதம்
பாடுகிறேன்

நேற்று வரை நான் வேறே
இன்று முதல் நான் வேறொ
காட்சி தந்த காதலியை
கனவிலும் நினைவிலும்
ரசிக்கிறேன்

துடிப்புடனே உதட்டிலும்
வார்த்தைகள் ஒத்திகை பார்க்குமெ
அவள் அருகினிலே தடுமாறுமே

கண்ணோடு நான் பேசிய
கதைகள் மாறுமோ?
பேச்சோடு தேன் தந்த
சுவைதான் தீருமோ?

எனை ஆளும் ரோஜாவே
என்னிதயம் உன் வழியில்
நம் காதலில் உருகுமே
இன்பம் பெருகுமே

No comments: