Tuesday, November 25, 2008

காதல் வலி - "நினைவுகளே"

நினைவுகளே நினைவுகளே நீங்கிவிடுங்கள்
நீலம் பூத்த மைவிழியை மறந்துவிடுங்கள்
காதலில் அலைந்தேன் கனவினில் திரிந்தேன்
அவள் உள்ளம் புரிந்ததம்மா
என் வாழ்க்கை கரையுதம்மா

ஏற்றி வைப்பாள் தீபமென்று
ஏந்திழைக்கு காத்திருந்தேன்
காத்திருந்த காலமெல்லாம் வீணாக போகுதம்மா
கண்மனியை நாயகியாய் கனவினில் கண்டேன்
கண்டது கனவென நினைவில் சொன்னாளே

கற்றுக்கொண்டேன் பாடங்கள் காதலினால்
பெற்றுக்கொண்டேன் துன்பங்கள் அவள் நினைவால்
பூந்தாரகை எனை மறந்தாலும் பிரியேன் அவள் கனவுகளோடு
ஒருதலையாய் காதல் கொண்டேன்
அவள் ஒருவளுக்கே என் வாழ்வை தந்தேன்

No comments: