Monday, November 24, 2008

உன்னாலே! உன்னாலே!

ஒவ்வொரு முறை முயன்றும்
தோற்றுப் போகிறேன்
உன் பார்வையில்........


ஜன்னல் கம்பிகளில்
கண்பட்டுத்தான்
இதயம் சிறைபடுகிறது....


அணை கடந்த வெள்ளமாய்
நான்!
தொலைவில் வருகிறாள்
காதலி....


நீ வந்தாய்
நிலவு ஒளிர்ந்தது
நானும்தான்.....


கண்கள் செலுத்திய
காதல் ஏவுகனை
உன் பார்வை...

அடை மழையிலும்
நிலவு!
எதிர் வீட்டு ஜன்னல்

No comments: