சுகமான இராகங்கள் நாளும்
என் மனதில் இசைக்கின்றது
சுவைத் தேன் பெண்ணல்லவோ
கீதம் புனைகின்றது
முகம் தேடி எங்கெங்கோ
அலைகின்றேன் உன்
மனம் நாடி எனை
சேர்த்திட முயல்கின்றேன்
மணமாலை நிதம் சூட்டி
உனை பார்க்கின்றேன் அந்த
மண நாளை உன்னிடம்
எதிர் பார்க்கிறேன்
அழகான மான் போல
மறைந்தோடினாய்
இனிதான நினைவோடு
உயிர் வாழ்கிறேன்
பால் போன்ற சிரிப்போடு
எனை மாற்றினாய்
பழகாத உன் பெண்மைக்கு
மெருகூட்டினாய்
Friday, November 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment