Friday, November 14, 2008

காதல் "திவால்"

எங்கு சென்றாய் இதயம் விட்டு
உன் காலடி சுவடுகள்
இன்னும் இங்கே

தென்றல் உன் சுவாசக் காற்றாய்
இலைகளின் அசைவுகள் உன் கொலுசாய்
பறவயின் ஓசை உன் சிரிப்பாய்
இன்னும் இங்கே
எங்கு சென்றாய் இதயம் விட்டு

மணித்துளிகள் நொடிகளானது
இப்போது நொடிகளும் யுகங்களாய்
உன் மௌனம் பேசியது
இன்று கொல்கிறது
எங்கு சென்றாய் இதயம் விட்டு

நீதான் நானென்றாய்
யாரோவாகினென் இன்றோ
கேட்டுப்பார் உனக்குள்
இருப்பேன் இன்னும்
முதலில் புகுந்தவன் முடிவில்லாதவன்
இன்னும் இங்கே
எங்கு சென்றாய் இதயம் விட்டு

அன்பெ சிவமென்றென் நீயுமென்றேன்
பொருளாதரம் என்றாய்
நிதி சிக்கலில் என் காதல்
தீரும்வரை நான்
இன்னும் இங்கே
எங்கு சென்றாய் இதயம் விட்டு

No comments: