Friday, November 28, 2008

காதல் வலி - "என் காதல்"

என் காதல் உன்னை வந்து
சேரவில்லையா
ஏங்கி மனதுள் நானும்
புழுங்கவில்லையா
என்னோடு நானே உன்னை
தேடுகின்றேன்
கண்ணீரில் நானும்
வாடுகின்றேன்

காதல் என்னும் தேரிலே
நானும் பறந்து வந்தேன்
மனம் வாடி நானே
வந்த வழியில் நின்றேன்
உன்னோடுதான் எந்தன்
வாழ்வு மானே
தவிக்கிறேன் எனக்குள்
நானே

வாசம் போன பின்னே
பூவிருந்தும் என்ன
தேவி நீயும் போன பின்னே
நானும் இருந்து என்ன
கண்கள் இங்கு தூங்குமோ
இதயம் உன்னை மறக்குமோ
கண்ணீரில் நானே வாடுகின்றேன்

No comments: