Saturday, February 7, 2009

காதல் வந்தால்....

அலை பேசியில்
அழைத்து
அன்பே!
நீ பேசினால்
சப்தமில்லா வார்த்தைகளும்
அர்த்தமாகும்
சப்தங்களும் வார்தைகளாகும்

அருகினில் வந்தால்
கண்கள் பேசும்
வாய் ஊமையாகும்

நினைவில் வந்தால்
நீ கவிதையாகும்
விந்தை எனக்கே புதிருமாகும்

உறக்கத்தில் வந்தால்
கனவாகும் உன்னருகே
என் செயல்கள் தைரியமாகும்

பிரிவு வந்தால்
உடைந்து போகும்
உயிர் நீ என உண்மையாகும்

No comments: