மானே தேனே நீயேதானே
இனிக்கும் இன்பம் உன்பேச்சில்தானே
வாழ்க்கை வசந்தம் தானே
வாழும் சூழும் பாசம்தானே
என்னுயிர்க்கு நீ உருவம்தானே
உனைச்சுற்றும் பக்தன் என்பேனே
உன்னில் என்னை கண்டேனே
உணர்ந்திட மகிழ்ந்திட சுகமென்பேனே
அம்மாவென்று அழைத்தாய் சுவைத்தேனே
சும்மாவே சுரக்கிறாய் இதழில்தானே
பெருமைக்கு ஆளானேன் நானே
பெண்மைக்கு பொருளானேன் உண்மைதானே
Thursday, February 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment