Thursday, February 26, 2009

குழந்தை

மானே தேனே நீயேதானே
இனிக்கும் இன்பம் உன்பேச்சில்தானே

வாழ்க்கை வசந்தம் தானே
வாழும் சூழும் பாசம்தானே

என்னுயிர்க்கு நீ உருவம்தானே
உனைச்சுற்றும் பக்தன் என்பேனே

உன்னில் என்னை கண்டேனே
உணர்ந்திட மகிழ்ந்திட சுகமென்பேனே

அம்மாவென்று அழைத்தாய் சுவைத்தேனே
சும்மாவே சுரக்கிறாய் இதழில்தானே

பெருமைக்கு ஆளானேன் நானே
பெண்மைக்கு பொருளானேன் உண்மைதானே

No comments: