Saturday, February 14, 2009

அன்பே என் ஆருயிரே!!!


என்னானு எனக்கு தெரியல
எதாச்சு அதுவும் புரியல
தூக்கம்தான் போச்சு சிலநாளா
எம்மேல காதலுன்னு நீ சொன்னதால

சோதனைதான் பல உருவில் காதலுக்கு
சொல்லிதான் தெரியனுமா அது உனக்கு
சந்திக்கலாமுன்னு சொல்லிப்புட்ட காதலர் தினத்துல
வந்துருச்சு தவிப்புதான் இதயத்துல

அந்த பக்கம் சிவசேனா
இந்த பக்கம் ராமசேனா
கத்துறாங்க விடுவேனா
சுத்துறாங்க தலைப்பேனா

கண்ணை பறிச்சு வில்லை முறிச்சு
காதல் பண்ணாரு ராமரு
பொண்ணை தூக்கி காதல தாங்கி
கல்யாணம் பண்ணாரு சிவனாறு

கடவுளெல்லாம் காதலிச்சா கும்பிடுறாங்க
கும்பிடுறவங்க காதலிச்சா குமுறுறாங்க
கோபிக்காத காதல வாழ்த்தா அனுப்புறெங்க
உண்மையான காதலுக்கு தனி தினம் தேவையில்லங்க

No comments: