Saturday, February 14, 2009

இனிமேலும் தாங்காது மனம்


ஏன் எனெக்கென்ன ஆச்சு
உன் எதிரில் வாங்குது மூச்சு
பேசுற கண்ணுல பேச்சு
மனசுல பொங்குறேன் காதலாச்சு

என்னென்னவோ நினைக்கிறென் ஏங்கி
இதயத்திலதான் உன்னை தாங்கி
வாழுறென் நானும் மயங்கி
சேர்ந்திடு நீதான் மனமிரங்கி

கண்ண மூடுனா நீதான் தெரியிற
கனவா வந்து என்னை வாட்டுற
ஏன் இப்படி பண்னுற
கொல்லாம நீயும் கொல்லுற

இனிமேலும் தாங்காது மனம்
வருது இப்போ காதலர் தினம்
சொல்லிவிடு உன் காதல் எண்ணம்
இதற்கில்லை ஈடு இது திண்ணம்

No comments: