வெற்றுக்கூச்சல் பகல் வேடம்
வேடிக்கை மனிதர்கள்
அன்றாட வாழ்க்கையில்
அலுத்துப்போன காட்சிகள்
அடுத்த வீட்டில் அலறல் என்றாலும்
தமக்கில்லை என
செவிடாகும் காதுகள்
குருடாகும் கண்கள்
வாய் பேசும்.. மனிதாபிமானம்
இயலாமை இயல்பாய்
இணைந்து இருக்கையில்
உயிர்த்துண்பம் உணரமுடியுமோ?
நடப்பதென்னவோ இலங்கையில்தனே!!
சட்டங்களின் பிடியில்
உணர்ச்சிகள் எங்கே?
அரசியல் முறைகளில்
அறிவுதான் எங்கே?
கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கள்
போராட்டம் கடையடைப்பு
தீக்குளிப்பு... பழகிப்போனோம்
என்றேனும் ஒன்றானோமா?
கலங்கிய கண்களோடு
கொடுதுண்பம் மக்கள் படும்நிலை
கவிதையாய் உருமாற்ற முயன்றாலும்
என் (நம்) இயலாமை விரக்தியாய்
வியாபிக்கிறது கண்ணீராய்...
Thursday, February 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment