Thursday, February 26, 2009

இயலாமை

வெற்றுக்கூச்சல் பகல் வேடம்
வேடிக்கை மனிதர்கள்
அன்றாட வாழ்க்கையில்
அலுத்துப்போன காட்சிகள்

அடுத்த வீட்டில் அலறல் என்றாலும்
தமக்கில்லை என
செவிடாகும் காதுகள்
குருடாகும் கண்கள்
வாய் பேசும்.. மனிதாபிமானம்

இயலாமை இயல்பாய்
இணைந்து இருக்கையில்
உயிர்த்துண்பம் உணரமுடியுமோ?
நடப்பதென்னவோ இலங்கையில்தனே!!

சட்டங்களின் பிடியில்
உணர்ச்சிகள் எங்கே?
அரசியல் முறைகளில்
அறிவுதான் எங்கே?

கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கள்
போராட்டம் கடையடைப்பு
தீக்குளிப்பு... பழகிப்போனோம்
என்றேனும் ஒன்றானோமா?

கலங்கிய கண்களோடு
கொடுதுண்பம் மக்கள் படும்நிலை
கவிதையாய் உருமாற்ற முயன்றாலும்
என் (நம்) இயலாமை விரக்தியாய்
வியாபிக்கிறது கண்ணீராய்...

No comments: