Monday, August 24, 2009

முரண்

செல்லம்! சாப்புடுறா கண்ணா!
நெய்யூற்றி! பிசைந்த சாதத்தோடு
குழந்தையுடன் போராடி சலித்து..

"அம்மா" "தாயே" எனும் அழைப்பில்
வாசல் திரும்பியபோது!

பிச்சை கேட்டு நின்றவளின்
தோளில் இருந்த குழந்தை
சொன்னது "அம்மா பசிக்குது"

No comments: