Monday, November 15, 2010

மழை

ஒவ்வொரு முறை
வானம் பார்க்கும் பொழுதெல்லாம்
மேகம் பல உருவெடுக்கும்
விழிக்கு விருந்து வைத்து
கற்பனைகளை தூண்டிவிடும்
உள்ளத்தின் உரசல்கள்
மனதின் இறுக்கங்கள்
கரைத்து விடும்...

நீல வான பரப்பில்
வெண்மையாய் ஒளிர்ந்திடும்
ஒப்பனையில்லா அழகில்
ஒரு இணையில்லா
மகிழ்வை அளித்திடும்

பல நாட்கள் களித்திருந்தேன்
மேகத்தின் எழிலில் திளைத்திருந்தேன்

ஒர் நாள்..
நிலவென வந்தாளே
நிலப் பெண் ஒருத்தி
விழி வீச்சில் விழச் செய்தாள்
இமை மூடாமல் ரசிக்க செய்தாள்
மேகத்தை நிலவு மறைத்த
விந்தை நிகழ்ந்திடும்
அப்பொழுதில்
இதயங்கள் உரசிக்கொள்ள
காதல் தீ பற்றியதே

தினம் ரசிக்கும் மேகப்பெண்
கோவம் கொண்டாளோ!
பொறாமயிற் கருத்தாளோ!
கள்ளி யாரிவளென
இடியென சத்தமிட்டாள்
மின்னலென சைகையிட்டாள்

எவ்வித குறிப்பும் உணராமல்
நிலப்பெண் காதலில்
லயித்திருக்க

துன்பம் தாங்கா.... மேகப்பெண்
கண்ணீரால் வீதி நிரப்ப
வற்றாது அழுகின்றாள்

ஹைய்யா! மழை.. மழையென
மழலைகள் கும்மாலமிட்டனர்

வான் நேக்க
மேகம்.. இருள் பூசியிருந்தது..

No comments: