தனிமையில் இன்றென்னை விட்டுவிட்டாய்..
ஏனோ... உன் நினைவுகளை கூட்டி செல்ல மறந்துவிட்டாய்
நான் இன்று தவிப்பதும்.. துடிப்பதும்.... உனக்கே..
நீயின்றி நானாய் வாழ்வேனா.... இல்லை
உயிரின்றி... உடலாய்.. கிடப்பேனா...
நீ மறைகிறாய்... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா..
நிலவின்றி தவிக்கும் வான் போல
இருள் சூழ்ந்து போனதே! ஒளி என்பது
உன் வரவென்று ஆனதே...
நீரின்றி தவிக்கும் செடி போல
வாடிப் போனதே! வாழ்வென்பது
நீயென்று ஆனதே....
நீ மறைகிறாய்... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா..
சொல்லாமல் என் உள்ளே வந்தாய்
ஏனடி.. இன்று கொல்லாமல் கொல்லுகின்றாய்
இல்லாமல்... போவேனே.. நீ இல்லையென்றால்...
மெழுகாய் கரையுதே! உடல்....
காதலில்... உயிர் எரியுதே....
அணைக்கும் விரல்களை தேடுதே...கண்களே!
நீ மறைகிறாய் ... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா..
சிறகுகள் பறித்து சென்று... இன்று
தனிமையில் சிறைவைத்தாய்...
உறவொன்றில் விலகிச்சென்று..
கண்ணீர் பரிசு தந்தாய்...
இல்லாமல்... போவேனே.. நீ இல்லையென்றால்...
மெழுகாய் கரையுதே! உடல்....
காதலில்... உயிர் எரியுதே....
நீ மறைகிறாய் ... நான் கரைகிறேன்
ஓ... காதல்... இதுதானா... காதல் வலிதானா...
Tuesday, June 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment