அன்பில் ஒரு பொய்
"அப்பா! எப்பமா வருவார்"
மழலையிடம் எழும்
வினாவில்
நாளைக்கு...
என்றதில்
அன்பில் ஒரு பொய்
நிரப்புகிறாள்
அப்பாவோ
சிரித்தபடி
புகைப்படத்தில்
ஒரு நினைப்பை
விதைக்கிறார்
மழலையின்
மற்றொரு முறை
இதே வினாவுக்கு....
பதிலுரைக்க
கண்ணீர் நிரப்புகிறாள்
இன்றே!...
No comments:
Post a Comment