Tuesday, June 22, 2010

தனிமையின் தேவை

"நாளைக்கு வந்திருவேன்" என்றவளை
வழியனுப்புவதில் ஒளிந்திருக்கும்
ஒரு மகிழ்ச்சி!

கேள்விகளோ!
பதில் எதிர்பார்த்தலோ
இல்லாமல்...
ஒரு நாள்
ஒரு தனிமை

ஞாயிற்று கிழமை வேறு..
சொல்லவா வேண்டும்!
அலுவலகம் இல்லை
"ஆத்துக்காரியும்" இல்லை
உணர்ந்தவர்களுக்கே
இத் தனிமை "ஒரு சொர்கம்"

வார்த்தைகளின் "சீற்றத்திலே"
தொடங்கும் காலைப் பொழுதும்
அதிலே முடிவடையும்
மாலைப் பொழுதும்

அலுவலக நாட்களின்.. பரபரப்பு இப்படித்தான்..

புரிந்திருப்பீர்கள்.. இப்பொழுது
இந்த தனிமை...
கேள்விகளோ..
பதில் எதிர்பார்த்தலோ... இல்லாமல்
கழிவது... எவ்வளவு சுகமானது என்று

செல்போன் ஒலிக்கிறது..
"ரிங் டோனில்" தெரிந்தது...
அவள் தான்... அவளேதான்

"நீங்கள் தொடர்பு கொண்ட நபர்
தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்
சிறிது நேரம் கழித்து அழைக்கவும்"

என்றதில்..

ஹும்..

தனிமை ... இப்பொழுது
சுகமாய்...
சிகரெட் புகையின்
பல வடிவங்களில்
வெளிப்பட தொடங்கியிருந்தது...

No comments: