Wednesday, June 23, 2010

தனிமை

மௌனம் நிரம்பி
அழைப்புகள் ஏதுமில்லாமல்
தொடங்கிய நாளில்

வீசுதல் ஏதுமின்றி
நிசப்தத்தின் தன்மை
அறிவித்தபடி....
அறையின் உள் புகும்
காற்று

வார்த்தைகளற்ற
தனிமையின் கவிதையொன்றை
அறையெங்கிலும்
வாசிக்கிறது

எழுதுகோலும் காகிதம்
ரசித்து இருக்க கூடும்
அவையும்
தொடர்பின்றி இருந்தன..

குறுக்கீடு ஏதுமின்றி தொடரும்
இப்பொழுதில்
தனிமை... முழுவதுமாய்
ஆக்கிரமித்து இருந்தது..
விடுபட
விருப்பமில்லாமல்..

No comments: