Wednesday, June 23, 2010

உணர்வுகள் உலரும் பொழுதுகள்

கொடும் வாளின் கொல்லும்
தடம் பிடித்து மிரட்டும் தனிமையில்
தீண்டும் காற்றென்னை தீயாய் சுடும்
வேண்டாப் பொழுதாய் கழிக்கவியலா
தலையனையின் தற்காலிக ஆறுதல்
மலையருவியென கண்ணீரில் முளைக்கும்
நேய மணாளன் நினைவில் நெகிழ
சுயமாய் பரவும் உணர்வின் அலைகள்

மாண்டவன் வரவியலா மாளுதலில்
தீண்டா மெய்யில் பொய்யாய் புலர்ந்த விடியல்
வீரியத்தை கூட்டி தனிமையின் கைகோர்த்து
இரவின் விளையாட்டில் இம்சையாகும்
இன்னுமோர் தனிமை பொழுதில்
பெண்ணின் உணர்வுகள் உலர்ந்து...

No comments: