Tuesday, June 15, 2010

அடிச்சேன்னா! பாரு

காத்திருக்கும் பொழுதுகளில்
மலரில் முத்தமிட்ட
வண்டொன்றை கேட்டேன்

"உனக்கெப்படி தாரளமாய்
இப்படி ஒரு அனுமதி" யென்று

"அது மட்டும் ரகசியம்" மென
ரீங்காரமிட்டு சென்றது..

இதோ அவள் வருகிறாள்
இம்முறையும் கேட்பேன்

"அடிச்சேன்னா! பாரு"

இப்போதே அவள் குரல்
காதை திருகி ஒலிக்கிறது

No comments: