Tuesday, May 25, 2010

என்னவென்று நான் பேசலாம்!

வாசமாக மலர்கள் பேசலாம்
உன் தலைச்சூட நாளும் ஏங்கலாம்
மழையாக வானம் பேசலாம்
நீ நனைவதால் மகிழ்ச்சி கொள்ளலாம்
ஒளியாக நிலவு பேசலாம்
உன் அழகு குறிப்பை கேட்டு வாங்கலாம்
ஒலியாக பறவைகள் பேசலாம்
உன் பேச்சில் மயக்கம் கொள்ளலாம்
கருணையாக இதயம் பேசலாம்
உன் இரக்கத்தில் மனிதம் வாழலாம்
கவிதையாக காதல் பேசலாம்
நீயென்பதால் வார்த்தைகள் இனிமையாகலாம்
மௌனமாக கண்கள் பேசலாம்
அழகுக்கோர் அழகும் ஆகலாம்
என்னவென்று நான் பேசலாம்
சொல்! எப்படி உன்னுயிரில் கலந்துபோகலாம்....

No comments: