Saturday, May 22, 2010

காதலினால்.. உன் காதலினால்...

அன்பே உந்தன் நினைவுகள் இங்கே
உள்ளம் சூழ்ந்து கொல்லுதே
கண்ணில் ஒரு வெள்ளம் இங்கே
என்னை இழுத்து செல்லுதே

காதலினால்.. அது உன் காதலினால்...


மை பூசிய விழிகள் என்னை
மறந்துதான் போனதென்ன
கை கோர்த்து நடந்த நாட்கள்
விலகித்தான் போனதென்ன
நெருக்கம் தான் பிரிந்து சென்று
வேடிக்கை பார்க்குது இன்று
இனிவருமா அந்நாட்கள்
மனமின்று கேட்கிறதே
பதிலேதும் இல்லாமல்
மௌனம் ஒன்று நிறைகிறதே


இரு கைநீட்டி மழைநீரில் நீயும்தான் நனைத்தாயே
ஒரு கைப்பிடித்த நீராலே முகத்தில்தான் அடித்தாயே
நனைவோம் வா என்று என்னைத்தான் இழுத்தாயே
தலை நனைத்த மழைத்துளியை வளைகரத்தால் துடைத்தாயே
தாவணியால் குடை ஒன்றை பிடித்தாயே

மழைக்காலம் வரும் போதெல்லாம்
சொல்லும் அவை நம் கதைகள்
இனிவருமா அந்நாட்கள் மனமின்று கேட்கிறதே
பதிலேதும் இல்லாமல் மௌனம் ஒன்று நிறைகிறதே
பெய்யும் மழைத்துளிகள் இன்று உன் ஞாபகங்களை தெறிக்கிறதே
பொய்யோ உன் பிரிவென்று இதயம் இன்னும் துடிக்கிறதே

காதலினால்.. அது உன் காதலினால்...

No comments: