Friday, March 13, 2009

பெண்மையை போற்று நீ தினம்

மலரும் சிரிப்பாலே
மழலை மொழியாலே
சுட்டிச் செயலாலே
கட்டிக் கரும்பாக
சிறு பெண்கள்

துறுதுறுவென அறியத்துடிக்கும்
சுறுசுறுவெனெ செயல்களாலே
கலகல சிரிப்பொலிக்கும்
கடிமனதையும் கரைக்கும்
வளர் பெண்கள்

பருவத்தால் படபடக்கும்
புருவத்தால் கலைசிறக்கும்
காண்பவரின் கவனம் திருப்பும்
அழகுவெட்கம் அணிந்திருக்கும்
கன்னிப் பெண்கள்

இதயத்தில் பாதுகாத்து
இனியவளாய் சுவைகோர்த்து
உற்றவனின் உயிராக
உணர்வுக்கு உணவாக
மனைவியாய் பெண்கள்

உயிர்தாங்கி உயிர்கொடுத்து
வலிதாங்கி பிறப்பெடுத்து
உண்மை அன்பின் பொருளாகி
பெண்மை பெற்ற சிறப்பாகும்
தாயான பெண்கள்

எந்நிலை நேரினும் வீழாது
வாழ்த்தும் மனம் நிலைதாழாது
தம்மக்கள் சுகம் தன்சுகமாய்
தியாக தீபமாய் சுடரும்
முதிர் பெண்கள்

மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பலநிலை வாழ்வில்
பெண்கள் துனையின்றி எதுவுமில்லை
பெருமை சொல்ல வார்த்தைகளோ போதவில்லை
பெண்மையை போற்று நீ தினம்
உண்மைதானே கொண்டாடு பெண்கள் தினம்

No comments: