Monday, March 23, 2009

நான் உன்னை காதலிக்கிறேன்!!!!!

முதல் முறை உன்னை பார்த்த..
அந்த நிமிடங்களில்!
என்னை மறந்து உன்னில் தொலைந்தேன்

இருள்கூந்தல் விலக்கி..
உன் கண்கள் ஏற்றிய பார்வை ஒளியால்!
என்னில் புகுந்து..
இதயத்தை உனது வசமாக்கினாய்

உன்னை மட்டும் பார்க்காமல் போயிருந்தால்!
வாழ்வின் அர்த்தம் புரியாமலே போயிருக்கும்!!

பிரம்மன் படைப்பின் சிறப்பு படைப்பு நீ!
வர்ணிக்க வார்தைகள் இல்லாமல்..
வாடும் ரசிகன் நான்

சிறைப்பட்டு எனது மனம்!
விடுதலை பெற விருப்பமிலாமல்..
உனது அன்புச்சிறையில்
ஆயுள்கைதியாக! அடம் பிடிக்கிறது..

உன் நிழலென எனை மாற்றினாய்!
நித்தமமும்
நினைவுகளிலும் நீயே வந்து போகிறாய்..

நீ பார்ப்பதனாலேயே..
நான் அழகாகிறேன்!!

இப்பொதெல்லாம்...
உனது கொலுசொலியும்! சிரிப்பொலியும்!
நான் ரசிக்கும்..
இசை ஒலிகள் ஆனது

உன் கூந்தல் ஏறும் பூக்கள் கூட வாடமல்!
தன் வாழ்நாளை கொஞ்சம் நீட்டி வாழ்கிறது

உனைப்பார்க்காத நாட்கள்தான் என் வாழ்வின்
இருண்ட நாட்கள்! நாட்காட்டியில் இறந்த நாட்கள்!

மொத்தத்தில்.. உன்னிடம் அடிமைப் பட்டு
வாழ்ந்திட ஏங்குது.. இந்த ஆணின் மனம்

ஏய்... பெண்ணே!!
நான் உன்னை காதலிக்கிறேன்!!!!!

No comments: