Thursday, January 29, 2009

உனை நினைக்க ஒரு நாள்!!


அமைதியாய்..
ஆர்ப்பரிக்கும் கடலே!
ஆழிப்பேரலையாய்
சிரித்து சிதைத்து..
வாரிச்சுருட்டி வலிமைக்காட்டி
ஆனதோ!
ஆண்டுகள் நான்கு

இப்போதுதான் தெரிகிறது
உனை நினைக்க
ஒரு நாள்! வேண்டுமென்பதில்
இத்தனை இழப்புகளா?
எங்களுக்கு

நீ வற்றினாலும்
வற்றுமோ எங்கள் கண்ணிர்
வடுவாகிப்போன வாழ்வுக்கு

No comments: