Thursday, January 29, 2009

புத்தாண்டே நீ வருக!


அன்பை வெளிக் கொணர்ந்திங்கே
மானுடம் வாழ வைப்போம்
மனதில் நல்லெண்ணம் வளர்த்திங்கே
பயனுற வாழ்ந்திடுவோம்
இனிய சொல் இயம்புதற்க்கே
இனியேனும் முயற்சிப்போம்
பணிவாய் பண்பாய் பழகுதற்க்கே
துணிவாய் முடிவெடுப்போம்
இருந்தது இவ்வாறென வாதம்களைந்திங்கே
இனிசுகமெனும் நிலைபடைப்போம்
படைத்தவன் யாரென சண்டை விட்டிங்கே
பலர்நலம் வாழ பழகிக்கொள்வோம்
புதுவிடியல் புதுச்சிந்தனை பெற்றிங்கே
பொலிவாய் வாழ்ந்திட! புத்தாண்டே நீ வருக!

No comments: