Thursday, January 29, 2009

கொண்டாடுவோம் போகிதனை


நற்சிந்தனை துடைப்பம் கொண்டு
மனதின் அழுக்குகள் கூட்டி பெருக்கி
அகத்தே மண்டியிருக்கும் மாசுகளை
அறிவுறு ஒட்டடை கோல் கொண்டு
துடைத்து நீக்கி ஒன்றாய்
இனிதான காலைப் பொழுதில்
தீயிட்டு திரும்ப வாராமல்
எரித்து கொண்டாடுவோம் போகிதனை

No comments: