Thursday, January 29, 2009

பொங்கலோ பொங்கல்


எங்கும் நிறை வளமும்
தங்கும் நிரந்தர செல்வமும்
பொங்கும் மன மகிழ்வும்
யாவரும் பெற்றிடவே பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்

உழுது உயிர்காக்கும் உழவர்
தொழுது போற்றி நல்
பொழுது நிறைந்திட எவர்க்கும்
நன்றாய் விளங்கிடவே பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்

கலத்தில் காத்த விதைநெல்
நிலத்தில் விதைத்து வளர்
காலத்தில் கதிராய் முற்றி
செழுமை தந்தாய் கதிரவா!
பொங்கலோ பொங்கல்

பொங்கட்டும் உள்ளத்தில் அன்பு
தங்கட்டும் மனிதரில் மனிதம்
நீங்கட்டும் இன மத பேதம்
நன்றாய் ஒன்றாய் வாழ்ந்திட
ஏதுவாய் உலகமிருந்திட பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்

No comments: