விண்ணில் விளையாடும் நிலவென்றேன்
கண்ணில் உனைக்காணும் வரை அதுவே அழகென்றேன்
அடை மழைக்காலம் குளிர்ச்சியென்றேன்
அட! உனைக்காணும் வரை அதுவே மகிழ்ச்சியென்றேன்
வருடும் தென்றல் சுகமென்றேன் நீ
வரும்போது அதுவொரு சிறுசுகம் உணர்ந்தேன்
காண்பவை மகிழ்வென்றேன் உனைக்
கண் பார்த்த பின் நீயே அதில் முதல் என்றேன்
இப்படி நிலை மாற்றி என் உள்ளே புகுந்து விட்டாய்
எப்படி ஒரு பார்வையால் இதைச் செய்து விட்டாய்
மையெழுதும் காரிகையே நீ காதலெழுதிவிட்டாய்
கவியெழுதும் பாவலனாய் மாற்றியெனை விட்டாய்
இதோ! இதோ! நீ வருகிறாய்.. மீண்டும்
அதே! அதே! பார்வை யொன்றை வீசப் போகிறாய்
இன்னும் என்ன என்ன மாற்றங்கள் இனி
என்னிடத்திலே செய்யப் போகிறாய்?
Wednesday, April 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment