Wednesday, April 21, 2010

முதன் முதலாய்..

"ஒரு வேலைகூட செய்யறதில்லை"
தினம் அம்மாவிடம்
அர்ச்சனை பெறும் அவளும்

"ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை"
காலையில் காதுகளில் பாயும்
அப்பாவின் ஆதங்கத்துடன் அவனும்

"பாக்கெட்" பால் வாங்க
நிற்கும்வரிசையில்
பார்வைகள் பரிமாறிக்கொண்டு
"ப்ராக்கெட்" போட்டுக்கொள்ள

அர்ச்சனையும் ஆதங்கமும்
அவசியமற்று போனது
மறுநாள் முதன் முதலாய்..

No comments: