நீயுமில்ல நானுமில்ல
பொண்ணுதா இல்லாட்டா
உலகத்தில யாருமே இல்ல
உசுரக் குடுக்கிற
அம்மாவா நீயிருப்ப
பாசத்த பங்கு போட
பாசமா சண்டபோட
அக்காவா தங்கச்சியா
நீ பொறப்ப
அறிவுரைப்ப நீ ஆறுதலா
தோழியா துணையிருப்ப
அம்மாவுக்கு மறுவுருவா
பொஞ்சாதியா கைப்பிடிப்ப
உசுருக்கு உருவமா
மவளாத்தான் வரமாவ
கற்பனயில்ல இது கதையுமில்ல
எல்லாமாத்தான் நீயிருக்க
பொய்யுமில்லை புரட்டுமில்ல
ஒரு சக்தியாத்தான் நீயிருக்க
என்ன சொல்ல ஏது சொல்ல
பெரும சொல்ல ஒருநாளு போதவில்ல
வாழ்த்த சொல்ல புதுசா
வார்த்த ஒன்னும் தோணவில்ல
நீயுமில்ல நானுமில்ல
பொண்ணுதா இல்லாட்டா
உலகத்தில யாருமே இல்ல....
Thursday, March 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment